தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹுவாங்யான் தீவு மற்றும் அதனை சுற்றிய கடற்பரப்பு, வான்வெளிப் பகுதிகளில் சீன ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன. சீன மக்கள் விடுதலைப்படையின் தெற்கு தியேட்டர் கட்டளைப் பிரிவு கடற்படை மற்றும் வான்படை இணைந்து, இந்த ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கவும், எல்லை அத்துமீறல் போன்ற செயல்களுக்கு பதிலடி அளிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.