உலகம்

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு

கம்போடியா நாட்டில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தந்தி டிவி

கம்போடியாவை சேர்ந்த கலை பண்பாட்டுத் துறை மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்புடன் இணைந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் கம்போடியா நாட்டின் கெமர் பேரரசுக்கும் பல்லவ சோழ பேரரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கம்போடிய அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம், கம்போடிய நாட்டு பள்ளி, கல்லூரிகளில் பல்லவர், சோழ பேரரசின் வரலாற்றை பாடமாக வைக்கவும், திருக்குறளை கெமரில் மொழியில் பெயர்த்து பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும்,கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அச்சிலைகளின் திறப்புவிழா கம்போடியாவில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு