உலகம்

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு

கம்போடியா நாட்டில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தந்தி டிவி

கம்போடியாவை சேர்ந்த கலை பண்பாட்டுத் துறை மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்புடன் இணைந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் கம்போடியா நாட்டின் கெமர் பேரரசுக்கும் பல்லவ சோழ பேரரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கம்போடிய அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம், கம்போடிய நாட்டு பள்ளி, கல்லூரிகளில் பல்லவர், சோழ பேரரசின் வரலாற்றை பாடமாக வைக்கவும், திருக்குறளை கெமரில் மொழியில் பெயர்த்து பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும்,கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அச்சிலைகளின் திறப்புவிழா கம்போடியாவில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்