இந்தியர் மீது தாக்குதல்: லண்டன் மேயர் கண்டனம்
இந்த தாக்குதலில் இந்திய பெண்கள், குழந்தைகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்து செயல்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, லண்டன் மேயர் சாதிக்கான் தனது டுவிட்டர் வலைப்பக்கம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.