4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் கூறியுள்ளது
இதனால் கோவை, தேனி, தென்காசி மலை பகுதியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும்,நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதென்தமிழகத்தில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது