தமிழ்நாடு

Thoothukudi | தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தடுக்க முயன்ற SI-ஐ கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தடுக்க முயன்ற SI-ஐ கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு

thanthitv

Thoothukudi | தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தடுக்க முயன்ற SI-ஐ கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு திருச்செந்தூர் அருகே பஜாரில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் கீழே தள்ளிவிடப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். ஆத்தூரைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் எமர்சன் ஆகிய இருவரும் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த இருவரும் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் போலீசார், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Chennai High Court | ``தவறினால் மாற்ற நேரிடும்..'' - விஜிலென்ஸ்க்கு கறாராக சொன்ன சென்னை ஐகோர்ட்

Armstrong Case ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெருங்கிய க்ளைமேக்ஸ் - உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்

Income Tax Raid | தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் இறங்கிய வருமான வரித்துறையினர்..

TN Speaker | ``Rules book வெச்சு உங்களுக்கு Class எடுக்கணும்..'' - சட்டென டென்ஷன் ஆன சபாநாயகர்

CM Vijay | Digital Driving Licence | ``ஒரே நாளில் டிரைவிங் லைசன்ஸ்..'' - முதல்வர் விஜய் அறிவிப்பு