சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர், ஜெய்கணேஷ். இவர் தனது மனைவி பிரவீணா உடன் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் பிரதீப் என்ற மகன் உள்ளான்.
கடந்த புதன்கிழமை காலை ஜெய்கணேஷின் பிறந்தாள் அவரது வீட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கணவனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த மனைவி பிரவீணா, ஜெய்கணேஷ் மற்றும் மகன் பிரதீப் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்கு பிறகு, ஜெகதீஷிடம் உடலை ஒப்படைத்தனர். வாங்கும் சம்பளத்தில் பெற்றோருக்கு உதவும் ஜெய்கணேஷ், எதிர்கால சேமிப்பிற்கு பணம் கொடுக்கவில்லை என பிரவீணா குற்றம்சாட்டி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணவனின் பிறந்தாளை தன்னுடைய இறந்தநாளாக பிரவீணா மாற்றியது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.