Chennai Attack | வாக்கிங் சென்ற நபரை கல்லால் தாக்கிய பெண் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் நேர்ந்த கொடூரம்
தாக்கிய பெண் கைது கஞ்சா விற்பனை குறித்து போலீஸ்க்கு தகவல் கொடுத்ததால் தாக்குதல் சென்னையில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை குறித்து புகார் அளித்த நபரை தாக்கியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த குணசீலன், வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீரேகா என்பவர் தகாத வார்த்தையில் பேசி, கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய் யப்பட்டிருந்த குணசீலன், தாக்குதலில் காயமடைந்து மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ரேகாவை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ரேகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.