தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், நீர் வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 459 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 675 கன அடியாக அதிகரித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"