தமிழ்நாடு

பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தாய் - பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரான் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசி கொலை செய்த பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

விழுப்புரம் நகரில் பூந்தோட்ட பாதை அருகேயுள்ள கோலியனூரான் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசி கொலை செய்த பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பின்னர் அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர், காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனாட்சி என்பதும், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் அவருக்கு, மற்றொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பால் இந்த குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதனால், அந்த குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்