விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சண்முக பாண்டியன், மக்கள் தன் நடிப்பில் விஜயகாந்தை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகியுள்ள படைத்தலைவன் திரைப்படம், பண்ருட்டியில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு வந்த நடிகர் சண்முக பாண்டியன்,தனது ரசிர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தன் அண்ணன் அரசியலுக்கு என்றும் தான் சினிமாவிற்கு எனவும் தெரிவித்துள்ளார்.