சென்னை முகப்பேரில், 40 வருடங்களுக்கும் மேலாக இருந்த சீமை வாகை மரம், வேரோடு சாய்ந்ததில் அருகே உள்ள தனியார் மருத்துவமனை சேதமடைந்தது. மேலும் அங்கே இருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. மரம் சாய்ந்த போது, யாரும் அருகே இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.