தமிழ்நாடு

சிறுவன் ஜலசமாதி சம்பவத்தில் திடீர் திருப்பம் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

ஆரணி அருகே சிறுவன் ஜலசமாதி சம்பவத்தில் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்கள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

தந்தி டிவி
ஆரணி அருகே சிறுவன் ஜலசமாதி சம்பவத்தில் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்கள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆரணி அருகே படவேடு அடுத்து ராமநாதபுரம் என்ற கிராமத்தில் 16 வயது சிறுவனை ஜலசமாதி செய்த‌தாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சிறுவனின் மரணத்தில் மர்ம‌ம் இருப்பதாக கூறி பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் , சிறுவன் கிணற்றில் விழுந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்த‌தில், நுரையீரல் வெடித்து தான் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த‌துள்ளதால், அதன்பிறகே இந்த சம்பவத்தின் மர்ம‌ம் விலகும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்