திருவள்ளூரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை, சொகுசு காரில் வந்து கடத்திச் சென்ற மர்ம கும்பலின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், வீரராகவர் கோவில் தேரடி அருகே லங்காக்காரர் தெருவில் படுத்திருந்த பசு மாட்டை, சொகுசு காரில் வந்த கும்பல் கயிற்றால் கட்டி லாவகமாக காரினுள் ஏற்றி கடத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.