தமிழ்நாடு

மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறிய கணவர்

தந்தி டிவி
• தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் - ஜீவிதா தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஜீவிதா தனது குழந்தைகளுடன் தாயாரை பார்க்க திருப்பூர் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து திருப்பூர் சென்ற விஜயகுமார், காவல் நிலையத்திற்குச் சென்று சமாதானம் பேசி, மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார். இதையடுத்து போலீசாரும் அறிவுரை கூறி அனுப்பி வைத்த நிலையில், ஜீவிதா மீண்டும் கோபித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார், ஊத்துக்குளி சாலை, சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள செல்போன் டவரில் அதிகாலையில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விஜயகுமாரை பத்திரமாக மீட்டனர். ​இதையடுத்து, இருவரும் சமாதானம் அடைந்து பென்னாகரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை