செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுதடைந்ததால் நோயாளிகள் குடிநீரின்றித் தவித்து வருகின்றனர். மேலும், மருத்துவர்களைச் சந்திக்கவும் மருந்து வாங்கவும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதுடன், வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.