திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை மகா கணபதி ஹோமம் நடைபெற்றதைத் தொடர்ந்து காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற உள்ளது.