லாரிகளில் டீசல் திருடியவரை கையும் களவுமாக பிடித்த உரிமையாளர் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் லாரிகளில் தொடர்ந்து டீசல் திருடப்படுவதை அறிந்த உரிமையாளர், லாரியை ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்று ஓட்டுநருடன் சேர்ந்து திருடிய நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களின் துணையோடு நடக்கும் இத்தகைய டீசல் திருட்டு கும்பல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.