தமிழ்நாடு

மகன் வாங்கிய கடனுக்கு அப்பாவை கடத்தி கை விரலை வெட்டிய கொடூரம்..?

தந்தி டிவி

கடலூரில், மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கை விரலை கந்து வட்டி கும்பல் வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிதம்பரத்தில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் பழனிச்சாமி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், ஆனால் கடன் கொடுத்த பழனிச்சாமி 67 லட்சம் ரூபாய் வரை கேட்டதாகவும் தெரிகிறது. இதனை தர மறுத்த மணிகண்டன் அவரது தந்தை நடராஜன் உடன் சீர்காழி பகுதியில் குடி பெயர்ந்துள்ளார். இதனை அறிந்த கந்து வட்டி கும்பல் நடராஜனை காரில் கடத்தி சென்று கை விரல்களை வெட்டியாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கந்து வட்டி கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கந்து வட்டி கும்பல் திமுக கொடி கட்டிய காரில் இந்த கடத்தல் சம்பவத்தை அறங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்