திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள்
மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காங்கேயம் சாலை , புதுப்பாளையம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசித்தவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.