தமிழ்நாடு

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்

சாலையோரம் பச்சிளம் குழந்தைகளுடன், பசியும் பட்டினியாகவும் கிடந்த ஜோதிடம் பார்க்கும் மக்கள், தந்தி டிவி செய்தி எதிரொலியால் உணவு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ள கீழ்அனுவம் பட்டு கிராமத்தின் சாலையோரமாக குடுகுடுப்பை மற்றும் ஜோசியம் பார்க்கும் மக்கள் பலர் சிறிய குடில்கள் அமைத்து தங்கி இருந்தனர். ஊரடங்கால் மக்கள் யாரும் தெருவுக்குள் அனுமதிக்காத‌தால், உணவின்றி தவித்து வந்த இந்த மக்கள் குறித்து த‌ந்தி டி.வி நேற்று செய்தி வெளியிட்டது. இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் பலர், தானாக முன்வந்து, அந்த மக்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள், அரசி, பால் என அனைத்தையும் வழங்கிவிட்டு சென்றுள்ளனர். பல நாட்களாக பசியால் வாடிய அந்த மக்கள், த‌ந்தி டி.வி-யால் பசியாறியுள்ளதாக அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’