தமிழகத்தில் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வருவதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளாத்திகுளத்தில் மாணவி கொலை செய்யப்பட்டு 6 நாட்களாகியும் குற்றவாளி பிடிபடாதது தமிழகத்தின் அவல நிலை என சாடியுள்ளார்.