ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் தரைக்கடைகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்டதால், வியாபாரிகள் ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில், ஏற்கனவே கடைகள் வைத்திருந்த
வியாபாரிகளுக்கும் கடைகள் அமைக்க கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ராமநாதபுரம் எம்.எல்.ஏ, நகராட்சி தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.