சிறுவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள் - பதறவைக்கும் வீடியோ
மலப்புரத்தில் சிறுவர்களை கூட்டமாக துரத்திய தெருநாய்கள் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் முன்னியூரில், வீடு திரும்பிய சிறுவர்களை தெருநாய்கள் கூட்டமாக துரத்திய சம்பவத்தின் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. பயத்தில் அலறியபடி ஓடிய சிறுவர்களின் சத்தம் கேட்டு, பொதுமக்கள் வெளியே வந்து நாய்களை விரட்டியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக நாய்க்கடியில் இருந்து தப்பினர். கேரளாவில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.