புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார். புதுச்சேரியில் படபிடிப்பு வரி 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்ககோரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.