தமிழ்நாடு

"ஆற்றில் கலக்கும் கழிவு நீர் : பொதுமக்கள், கால்நடைகள் அவதி"

மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தந்தி டிவி
கால்வாய் தண்ணீரில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை நகரத்தில் உள்ள நயினார்குளம் நிறைந்து, உபரி நீர், நெல்லை கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் கீழே, குழாய்கள் மூலம் நெல்லை நகர பாதாள சாக்கடை கழிவு கொண்டு செல்லப்படும் நிலையில், கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் கலந்து, 5 ஆயிரம் ஏக்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும், கால்நடைகளும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்