பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் இடற்பாடுகள் ஏற்பட்டால் 14417 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் மெஷின்கள்
வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் 100 வாகனங்கள் ரோட்டரி கிளப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக உள்ளதாக அவர் கூறினார். சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தவறு நடந்திருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்திற்கான நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கையை மீண்டும் 32 ஆக அதிகரிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகம் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.