தமிழ்நாடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: "விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்" - வேளாண் துறை முதன்மை செயலாளர்

வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை, வேளாண்மை துறை முதன்மை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கடந்த இரண்டரை வருடங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார். எனவே மழை விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்திருந்தால், பாதிப்பு ஏற்படும்போது இதன் மூலம் பயன் அடைந்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு