தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

தனியார் பள்ளிகள் தொடர்ந்த ஒரு வழக்கில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்றும், நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பு, டிசம்பர் முதல் தொடங்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. பாடத் திட்டங்கள் குறைப்பு தொடர்பாக, பத்து நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு