தமிழ்நாடு

பள்ளி கல்வி கட்டணம் செலுத்தும் விவகாரம் - 70 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்க கோரிக்கை

பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை மூன்று தவணைகளாக வசூலிக்க, தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.பேரிடர் மேலாண்மை சட்டப்படி அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி கோவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி