தமிழ்நாடு

தமிழகம் முழுக்க பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தமிழகம் முழுக்க பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

பள்ளிகளுக்கு சிறப்பு பேச்சாளர்களை அழைக்கும் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென, அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வழங்கியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக யாரையும் அழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள இயக்குனர் கண்ணப்பன்,சிறப்பு அழைப்பாளர்களின் பின்னணியை அலசி ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதில் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அதனை மீண்டும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"