தமிழ்நாடு

வீசி எரியும் சிகரெட் துண்டுக்கு பணம் - உண்டியலில் சேகரித்து உரமாக்கும் இளைஞர்கள்

புகை பிடித்துக் கீழே வீசும் சிகரெட் துண்டுகளுக்கு, விலை நிர்ணயித்துள்ளது சேலம் இளைஞர் குழு

தந்தி டிவி

* சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ''குப்பைகாரன் குழு'' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள இளைஞர்கள், புகை பிடிப்பதால் ஏற்படும் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

* அதோடு, கடைகள் தோறும், வீசி எறியும் சிகரெட் துண்டுகளைச் சேகரிக்க, ''புகை உண்டியல்'' என்ற ஒரு பெட்டியைத் தந்துள்ளனர். அதில் சேகரிக்கப்படும் ஒரு கிலோ சிகரெட் துண்டுக்கு, விலையும் தருகின்றனர்.

* வீசி எறியும், எச்சில் சிகரெட் துண்டுகளை வைத்து என்ன தான் செய்யப் போகிறார்கள்...?

* புகைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகளால் மாசு ஏற்படுவதையாவது தடுக்கலாம் என்று களமிறங்கியுள்ளது இந்தக் குழு...

* ஒரு சிகரெட் துண்டு, 150 எம்.எல். நீரை உறிஞ்சி விடுகிறது என்பதும், அது, மக்குவதற்கு 60 நாட்கள் ஆகி விடுகிறது என்பதும் இவர்களின் கருத்து. சிகரெட் துண்டுகளால், நிலத்தடி நீர் மாசடைவது மட்டுமில்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாகவும் வேதனை படுகின்றனர்..

* பாதிப்பு இவ்வாறிருக்கு, இதைச் சேகரிப்பதால் பலனும் இருக்கிறது. புகையிலை மற்றும் காகித துண்டுகளை உரமாக பயன்படுத்த இயலும் என்கிறது இந்தக்குழு.

* ''குப்பைக்காரன் குழு'' இளைஞர்களின் நோக்கம் குப்பைகளை சேகரித்து மறுசுழச்சி செய்து, விற்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதே. இந்த முயற்சிக்கு, சேலம் மாவட்ட வியாபாரிகளும் ஆதரவளித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்