Saidai Duraisamy | பள்ளிப் பாடத்திட்டத்தில் மருத்துவக் கல்வி - சைதை துரைசாமி வலியுறுத்தல் பள்ளி மாணவர்களுக்கு சிறு வயதில் இருந்தே உடல்நலத்தை பாதுகாத்தல் மற்றும் ஆயுஷ் மருத்துவக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும் என, மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரையை நேரில் சந்தித்த அவர், இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். தற்போதுள்ள பாடத்திட்டங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சைதை துரைசாமி, மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்வியல் கல்வி விடுபட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார். எனவே, மாணவர்களிடையே ஆரோக்கிய அறியாமையைப் போக்கும் வகையில், உடல்நலன் பேணுவதை முதன்மைப்படுத்தி புதிய பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.