சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.