தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வந்த 4 மாதத்தில் பழுதடைந்த பாம்பாற்று பாலம்

பயன்பாட்டுக்கு வந்து 4 மாதமே ஆன உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்ததால், கிராம மக்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கும் பாம்பாற்று உயர்மட்ட பாலம் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை காணொலி காட்சி மூலம் ஜூன் மாதம் நான்காம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பாலம் பயன்பாட்டுக்கு வந்த 4 மாதங்களில், பாம்பாற்று உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலை பழுதாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பேயாடி கோட்டையில் இருந்து சிறுகாம்பூர், வெள்ளையாபுரம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை இணைக்கூடிய இந்த சாலை மற்றும் உயர்மட்ட பாலம் பழுதடைந்து உள்ள நிலையில், 30 கிராம மக்கள் அச்சத்துடன் பயணித்து வருவதாக தெரிவித்தனர். அரசு விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்