தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வந்த 4 மாதத்தில் பழுதடைந்த பாம்பாற்று பாலம்

பயன்பாட்டுக்கு வந்து 4 மாதமே ஆன உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்ததால், கிராம மக்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கும் பாம்பாற்று உயர்மட்ட பாலம் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை காணொலி காட்சி மூலம் ஜூன் மாதம் நான்காம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பாலம் பயன்பாட்டுக்கு வந்த 4 மாதங்களில், பாம்பாற்று உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலை பழுதாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பேயாடி கோட்டையில் இருந்து சிறுகாம்பூர், வெள்ளையாபுரம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை இணைக்கூடிய இந்த சாலை மற்றும் உயர்மட்ட பாலம் பழுதடைந்து உள்ள நிலையில், 30 கிராம மக்கள் அச்சத்துடன் பயணித்து வருவதாக தெரிவித்தனர். அரசு விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்