தமிழ்நாடு

ஆசையாக வாங்கிய பைக்.. வீட்டிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் பேராசிரியை உடல் நசுங்கி பலி

தந்தி டிவி

சேலத்தில், புது இ-பைக்கை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற 26 வயதே ஆன கல்லூரி பேராசிரியை கவி என்பவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மனைவியான இவர், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் இ-பைக் வாங்கி இருந்தார். பின்பு, AVR ரவுண்டானா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், அவர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை