தமிழ்நாடு

ஆபாச படம் பதிவேற்றம் : "திருச்சியை சேர்ந்தவர்கள் பங்களிப்பு அதிகம்"

இணைய தளத்தில் ஆபாச படங்களை பதிவேற்றுபவர்கள் குறித்து, அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

''சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் பட்டியலில், சென்னை நகரம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, அவ்வாறான படங்களை பதிவேற்றுபவர்கள் பட்டியலில் திருச்சியை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் கும்பல் தனித்தனி குழுவாக, 3 ஐ.பி. முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படி, ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பட்டியலில், சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஐ.பி. முகவரிகளை வைத்து சைபர் க்ரைம் போலீசார், தற்போது விசாரணையை துவக்கி உள்ளனர். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கண்டுபிடிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, "ஆபாச படங்களை இணையத் தளத்தில் பார்த்தவர்கள் மற்றும் பதிவேற்றியவர்கள் பட்டியல் கிடைத்தவுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று, திருச்சி மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை