சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை நரசிபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த ஆண்டு சிறுமியை மிரட்டி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சந்தோஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகிலா அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.