தமிழ்நாடு

Thiruvallur | Lorry | Money Seized | சென்னை அருகே லாரியில் சிக்கிய பார்சல் - ஹவாலா பணமா?

சென்னை அருகே லாரியில் சிக்கிய பார்சல் - ஹவாலா பணமா?

thanthitv

சென்னை அருகே லாரியில் சிக்கிய பார்சல் - ஹவாலா பணமா? செங்குன்றத்தில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடியில் பார்சல் லாரியை சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த இருவர் மற்றும் லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை