சுட்டெரிக்கு வெயில்.. குளுகுளு கிளைமேட்டுக்கு மக்கள் படையெடுக்கும் `ஸ்பாட்’
சமவெளிப் பகுதிகளில் வெயில் சதம் அடித்து வரும் நிலையில், குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். கோடை சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக, கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கோபுரம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. சால்வியா, பிக்கோனியா எனப் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சூழலில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து இயற்கை எழிலை ரசித்து மகிழ்கின்றனர்.