தமிழ்நாடு

OLX வலைதளத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் கைது

ஓ.எல்.எக்ஸ். இணைய தளத்தை தவறாக பயன்படுத்தி 200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்த கொள்ளையர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

பிரபல ஓ.எல்.எக்ஸ். இணைய தளத்தில், தங்களை ராணுவ வீரர்கள் என அறிமுகம் செய்த கும்பல், ராணுவ வாகனங்கள் குறைந்த விலையில் விற்பதாக கூறியது. இதற்கு, ஆசைப்பட்ட பலர், விளம்பரம் செய்த நபர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டதன் மூலம், பல கோடி ரூபாய்களை அந்தக் கும்பல் சுருட்டியது. இதுகுறித்து புகார் வந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் துனாவர் என்ற கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது. தமிழக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள துனாவர் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் பால் சிங் மற்றும் பச்சு சிங் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை