ஊட்டியில் தொடர் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக கடும் உறைபனி நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைக்குந்தா, காந்தல், அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் ஒரு டிகிரி வெப்பநிலை பதிவானதால், மைதானங்களில் உறை பனி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்பட்டது.