தமிழ்நாடு

குற்றாலத்தில் மிதமான சாரலுடன் நிலவும் இதமான சூழல் : சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும் மிதமான சாரலுடன், இதமான சூழல் நிலவி வருகிறது. முக்கிய அருவிகளில் காலை அதிக நீர்வரத்து காணப்பட்ட நிலையில் நண்பகல் வாக்கில் நீர்வரத்து மிதமாக இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க விதித்த தடையை போலீசார் விலக்கிக் கொண்டனர். மிதமான நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் பயமின்றி அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வெயிலும், மிதமான சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில் நிலவுவதால், சீசனை நன்றாக அனுபவித்து வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்