சேலம் :
அதேபோல சேலம் மாவட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுஷ் மருத்துவர்கள், 6 மாத பயிற்சிக்கு பின் மாற்று மருத்துவத்தையும் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவை ரத்துசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சை :
தஞ்சையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசு தலைமை மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.