கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு பாசனத்திற்காக 12 நாள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக 19 நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.