தமிழ்நாடு

கடலில் மிதந்து வந்த ரூ.117 கோடி மதிப்பிலான போதைப் பொருள் மீட்பு

மாமல்லபுரம் அருகே கடலில் இருந்து 117 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று மிதந்த நிலையில் கரை ஒதுங்கியது.

* எண்ணெய் அல்லது டீசல் இருக்கலாம் என நினைத்து அவற்றை பிரித்து பார்த்த போது ரீபைண்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட பொட்டலங்கள் இருந்தன.

* இதனை பார்த்த மீனவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

* சென்னையில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்ததில் அது மெத்தாம்பிடைமின் என்ற போதைப் பொருள் என தெரியவந்தது.

* இதனால் போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கைப்பற்றப்பட்ட 78 கிலோ கொண்ட அந்த போதைப் பொருளின் மதிப்பு மட்டும் 11 கோடி ரூபாய் என்கின்றனர்.

* மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட இடங்களில் இந்த வகையான போதைப் பொருளை சட்டவிரோதமாக தயாரிப்பதாகவும், கடல் வழியாக கடத்த முயன்ற போது கடலோர காவல் படை போலீசாருக்கு பயந்து அதனை கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

* போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்டது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?