Madhya Pradesh 5.2 kg Baby Born | 5.2 கிலோ எடையில் பிறந்த குழந்தை-ஆச்சரியத்தில் உறைந்த மருத்துவர்கள்
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் 5.2 கிலோ எடையில் குழந்தை ஒன்று பிறந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கர்ப்பிணியான சுபாங்கிக்கு அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இது போன்று எடை அதிகமான குழந்தைகள் பிறப்பது அரிது என்றும், குழந்தையின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.