தமிழ்நாடு

சந்திர கிரகணம்.. தஞ்சை பெரிய கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதில், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், நாளை ஐப்பசி மாத பெளர்ணமியை ஒட்டி, அன்ன அபிஷேகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்திற்கு முன்கூட்டியே நடை திறக்கப்பட்டு பின்னர் பெரிய கோயில் நடை சாத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சனிக்கிழமை மதியம் அன்னாபிஷேகம் 3 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. எனவே அன்னாபிஷேக அலங்காரத்தை பொதுமக்கள் 7 மணி வரை தரிசனம் செய்யலாம் என்றும், இரவு 8 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்