தமிழ்நாடு

மதுரை மாவட்டத்திற்கு ஜூலை 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தந்தி டிவி

* மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

* தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், மதுரைக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் வரும் 5 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

* இந்த நிலையில், வரும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்துக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகள் அனுமதிக்கப்படும் என்றும் , கட்டுப்பாட்டு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

* தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும் என்றும், அந்த பகுதிகளில் தினசரி இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

* ஊரடங்கு காலத்தில் தொற்று குறைந்திருந்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு அவசியமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை