தமிழ்நாடு

மதுரை மாவட்டத்திற்கு ஜூலை 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தந்தி டிவி

* மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

* தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், மதுரைக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் வரும் 5 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

* இந்த நிலையில், வரும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்துக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகள் அனுமதிக்கப்படும் என்றும் , கட்டுப்பாட்டு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

* தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும் என்றும், அந்த பகுதிகளில் தினசரி இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

* ஊரடங்கு காலத்தில் தொற்று குறைந்திருந்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு அவசியமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்