கிருஷ்ணகிரியை சேர்ந்த முதியவர்கள் ஒருவர் கண்ணாடிவிரியன் பாம்பு கடித்தும் பதற்றமின்றி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார்.
சப்பாணியூரைச் சேர்ந்தவர் ராஜா.
வீட்டின் பின்புறம் வாழைத் தோட்டத்தில் புற்களை அகற்றிக் கொண்டிருந்தபோது கண்ணாடிவிரியன் பாம்பு கடித்தது.
உடனடியாக உறவினர்களின் உதவியுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது எந்த பதற்றமும் இன்றி, மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் சிரித்துப் பேசியது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதற்கிடையே, ராஜாவை கடித்த பாம்பை உறவினர்கள் கொன்று மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.