மதுபானக் கடையில் தீ விபத்து - புதுச்சேரி எல்லையில் பரபரப்பு புதுச்சேரி-கடலூர் எல்லையான சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், தீ பரவுவதைக் கண்டு அவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி உயிர் தப்பினர்.